இது ஷோபா போட்ட திட்டம்-பெச்சு ரகுமான்
திருவனந்தபுரம்:
விபச்சார கும்பலின் தலைவி ஷோபாவுக்காகவே சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவைமிரட்டினேன் என மலையாள நடிகர் பெச்சு ரகுமான் வாக்குமூலம் அளித்துள்ளார்.கடந்த ஜூலை மாதம் அழகி சாந்தாவுடன் கண்டரரு மோகனரு ஆபாச கோலத்தில் இருப்பது போல புகைப்படம்எடுத்து அவரை ஒரு கும்பல் மிரட்டியது.
இதுதொடர்பாக தந்திரி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அழகி சாந்தா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான விபச்சாரக் கும்பல் தலைவிஷோபா, அவரது கூட்டாளிகள் இருவர், புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் மற்றும் பெச்சு ரகுமானின்உதவியாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
பெச்சு ரகுமான் சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் போலீஸாரிடம் சரணடைந்தார். அவரை தற்போதுபோலீஸார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸாரிடம் சரணடைந்தபோது பெச்சு ரகுமான் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பாதவது:
தந்திரியை ஆபாச படமெடுத்து மிரட்டிய சம்பவத்துக்கு சில நாட்கள் முன்புதான் ஷோபா பிளாக் மெயில்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக என்னிடம் கூறினார். ஷோபாவுக்கு பணம் தேவைப்பட்டதால் தந்திரியைநான் பிளாக் மெயில் செய்ய திட்டம் போட்டேன். தந்திரியை பிளாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை நான்பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஷோபா.
அவரை தனது வீட்டுக்கு வரவழைத்தார் ஷோபா. இதையடுத்து எனது நண்பர் மஜீது மூலமாக கூலிப்படையைஏற்பாடு செய்து தந்திரியை சாந்தாவுடன் வைத்து நிர்வாணமாக படம் எடுத்தோம். அதன் பின்னர் தந்திரியிடம்இருந்து பணம் பறிக்க நினைத்தோம்.
![]() |
நிர்வாண பட விவகாரத்தை தந்திரி வெளியே சொல்லமாட்டார் என நம்பினோம். ஆனால், அவர் அணிந்திருந்தநகைகளை மட்டும் கழற்றித் தந்துவிட்டு பணம் தராமல் ஓடிவிட்டார். தந்திரியிடம் இருந்து பறித்த நகைகளைகாசர்கோட்டில் உள்ள நகைக்கடையில் விற்றேன் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.
இதைத் தொடர்ந்து போலீசார் பெச்சு ரகுமான் கூறிய நகைக் கடைக்கு சென்று ரூ.1.17 லட்சம் மதிப்புள்ளதந்திரியின் நகையை மீட்டனர். ஆனால் அந்த நகையை கடை உரிமையாளரான சஞ்சீவ் சேட், உருக்கி விட்டார்.இதனால் அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.














Click it and Unblock the Notifications