ஜெ-வைகோ கூட்டத்துக்கு இடச் சிக்கல்
கோவை:
முதல்வர் கருணாநிதி 10ம் தேதி கோவையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதே போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 11ம் தேதி கோவை வருகிறார். அவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.தமிழக உள்ளாட்சி தேர்தல் 13, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையடுத்து தலைவர்கள் சூறாவளிபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் மதுரையை முற்றுகையிட்டு திக்குமுக்காட வைத்தனர். நேற்றிரவு மதுரை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றினார். ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். இன்று மதுரையில்பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
இந் நிலையில் நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் நெல்லை, சேலம், சென்னை, கோவை, திருச்சியில்ஜெயலலிதாவும் வைகோவும் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடக்கின்றன.
11ம் தேதி ஜெயலலிதா, வைகோ இருவரும் கோவை வருகின்றனர். ஜெயலலிதாவும், வைகோவும் ஒரேமேடையில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பிரசார மேடைக்கான இடம்கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 11ம் தேதி மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டியகட்டாயம் உள்ளதால் பகல் நேரத்தில் பொதுக் கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பகல் 1 மணிக்கு கூட்டத்தை நடத்த இடத்தை தேர்வு செய்வது குறித்து கோவை மாவட்ட செயலாளர் வேலுச்சாமிதலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
வழக்கமா அரசியல் கட்சிகள் கூட்டம் நடக்கும் கோவை வ.உ.சி. திடலில் இப்போது தனியார் பொருட்காட்சிநடந்து வருகிறது. இதனால் அங்கு எந்த கட்சியினரும் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 10ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் சிவானந்தா காலனியில் நடக்கிறது. அதேஇடத்தில் அதிமுகவும் அடுத்த நாள் கூட்டம் போட முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 10ம் தேதி இரவில் திமுக கூட்டம் முடிந்த பின் மறுநாள் பகல் 1 மணிக்குள் அதே இடத்தைஜெயலலிதாவுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் சிக்கல் வரலாம் என்பதால் வி.கே.கே.மேனன் ரோட்டில்பொதுக் கூட்டம் நடத்த அதிமுகவினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பகலில் கூட்டம் போட்டால் கூட்டம் வராதே என்ற கவலையும் அதிமுக, மதிமுகவினர் மத்தியில்நிலவுகிறது.












Click it and Unblock the Notifications