தமிழக விமான நிலையங்களுக்கு தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஷ்மீர் தீவிரவாதி முகம்மது அப்சலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விமானங்களை கடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விமானங்களை கடத்த அல்லது விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயலலாம் எனமத்திய உளவுத்துறை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பும், தீவிர கண்காணிப்பும்போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதல் பயணிகள், பார்வையாளர்கள் அனைவரும் தீவிர சோதனைசெய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல கோவை, மதுரை விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications