தர மாட்டார்கள், கிடைக்கவே கிடைக்காது-ஜெ
மதுரை:
திமுகவின் வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று அதிக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்மேற்கொண்டார். தெற்கு வாசலிலிலிருந்து அவர் பிரசாரத்தைத் தொடங்கினார்.பெரும் திரளாக கூடிய அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேனிலிருந்தபடி ஜெயலலிதாபேசுகையில்,
நான்கு மாதங்களுக்கு முன்பு அமைந்த திமுக மைனாரிட்டி அரசில் மக்கள் வேதனைகளையும், துன்பங்களையும்அனுபவித்து வருகின்றனர்.
மறுபடியும் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும்உயர்ந்துள்ளன.
மத்திய அரசும், அந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும்தான் இந்தஎரிபொருள் விலை உயர்வுக்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம்.
சிக்குன் குனியா தமிழகத்தை படாதபாடு படுத்தி வருகிறது. இதுவரை 287க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.லட்சக்கணக்கானோர் நோயினால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் உள்ளனர். ஆனால் திமுக அரசோபாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமோ, சிகிச்சையோ அளிக்க முன் வராமல் யாரும் இறக்கவில்லை எனகூறுகிறது.
வாக்குகளைக் கவர தொடர்ந்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நிறைவேற்ற முடியாத பலவாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. 2 ஏக்கர் நிலம் என்றார்கள். உங்களுக்குக் கிடைத்ததா.? வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி என்றார்கள். உங்களுக்குக் கிடைத்ததா.? காஸ் அடுப்பு இணைப்புடன் இலவசம்என்றார்கள் உங்களுக்குக் கிடைத்ததா?
தர மாட்டார்கள், கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது. ஆட்சியைப் பிடிக்க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிஎன்று தெரிந்தும் அந்த வாக்குறுதிகளை அளித்தனர். பொய்யான வாக்குறுதியை சொல்லி ஆட்சியைப்பிடித்தனர்.
இப்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அத்தனையையும் நிறுத்தி விடுவார்கள். தேர்தலை மனதில்வைத்துத்தான் சிலருக்கு மட்டும், அதாவது திமுகவினருக்கு மட்டும் டப்பா டிவியை வழங்கினர்.
உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், அதன் பின்னர் இந்தத் திட்டங்களை அப்படியே நிறுத்தி விடப் போகிறார்கள்.அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்படும்.
எனவே திமுக அரசு கூறும் வாக்குறுதிகளை மக்கள் நம்பக் கூடாது, ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications