அதிமுக பெண் வேட்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாதுகாப்பு கோரி சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் வசந்தா தவமணி,நாகமணி ஆகியோர் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை திருவல்லிக்கேணியில் தொடங்கினர்.
தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களை போலீஸார் பொய்வழக்குப் போட்டு கைது செய்ததைக் கண்டித்து இவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் அங்கு பரபரப்புஏற்பட்டது.












Click it and Unblock the Notifications