மரண தண்டனைகள் ரத்து-கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மரண தண்டனையை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கருணை மனுகொடுத்துள்ள முகம்மது அப்சல் குறித்து கருணாநிதி கூறுகையில்,

பெரும் தவறு செய்கிறவர்களை மரண தண்டனை உண்மையில் தண்டிப்பதில்லை. இதனால் சிறிது நேரமே வலிதந்துவிட்டு அவர்களுக்கு உண்மையில் தண்டனையில் இருந்து விடுதலை தந்துவிடுகிறது.

இதனால் மரண தண்டனைக்குப் பதிலாக, தவறு செய்தவர்கள் வாழ் நாள் எல்லாம் வருந்தும் வகையில் ஆயுள்முழுவதும் சிறையில் அடைக்கலாம். சிறையில் அவர்கள் திருந்தி வாழவும் வாய்ப்புக்களைத் தரலாம்.

இதனால் மரண தண்டனையை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பலியான வீரர்கள் மனைவிகள் கலாமுடன் சந்திப்பு:

இந் நிலையில் நாடாளுமன்றத் தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் இன்று ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தனர்.

முகம்மது அப்சலுக்கு கருணை காட்ட கூடாது என அவர்கள் கலாமிடம் கோரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+