சிக்குன் குனியா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது-அரசு
சென்னை:
தமிழகத்தில் சிக்குன் குனியா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என தலைமைச் செயலாளர் திரிபாதிகூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இதுவரை 62,698 பேர் சிக்குன் குனியாவால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த நோய்பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால், மிகக் குறைவான அளவிலேயே, மிகச் சிலருக்கேஇப்போது இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.
அக்டோபர் முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும், 8 மாவட்டங்களில், 226 பேருக்கு மட்டுமே இந்த நோய்தாக்குதல் ஏற்பட்டது. இதில் சென்னை, விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம் ஆகியவை அடங்கும்.
இந்த நோயால் 232 பேர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுவது மிகத் தவறான தகவல். சிக்குன் குனியா உயிர்பறிக்கும் நோயே அல்ல. சில பத்திரிக்கைகளில் சிக்குன் குனியாவால் இறந்ததாக வெளியிடப்பட்டுள்ளவர்களின்பட்டியலில் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் பலியானவர்கள், வேறுகாரணங்களால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் எல்லாம் இருக்கின்றன.
மேலும் பலியாகிவிட்டதாக வந்துள்ள பட்டியலில் உள்ள 9 பேர் உயிருடன் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.
சிக்குன் குனியா உயிரைப் பறிக்கும் நோயே அல்ல என உலக சுகாதார அமைப்பே மீண்டும் மீண்டும்கூறிவிட்டது.
இருப்பினும் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று உண்மையான நிலையை கண்டறிய மத்திய அரசு ஒருமருத்துவக் குழுவை அனுப்பி வைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications