சங்கரராமன் கொலை-விசாரணை ஒத்திவைப்பு
மதுரை - புதுச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தமிழக அரசின் வழக்கறிஞருக்குப்பதிலாக புதுச்சேரி வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று கோரி ஜெயேந்திரர்தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் இன்று புதுச்சேரிநீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை வரும்30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஜனனி கள்ள நோட்டு வழக்கும் ஒத்திவைப்பு:
அதே போல ஜனனி மீதான கள்ள நோட்டு வழக்கும் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடியில், ரூ. 30 லட்சம் கள்ளநோட்டுகள் இருந்ததால் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சுரேஷ்,ஜமீன்தார் ஜகதீஸ்ராஜா உள்ளிட்ட 4 பேரும் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மதுரை போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் நடந்துவருகிறது.
இதில் ஜனனி சார்பில் மட்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரமீஜா மற்றும்சுரேஷ் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இவர்கள் வரும் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications