மதுரை தேர்தல்: அதிமுக மீது திமுக புகார்
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் 11ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இந் நிலையில்திமுக எம்பியான குப்புசாமி, மத்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்துள்ளார்.அதில், இடைத் தேர்தலில் அதிமுகவினர் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே தேர்தலைநியாயமாக நடத்த கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கோரியுள்ளார்.
மைலாப்பூரில் கருணாநிதி இன்று பிரசாரம்:
இந் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றுமயிலை மாங்கொல்லையில் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
கடந்த 5ம் தேதி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை நெல்லையில் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி, மறுநாள்மதுரையில் பிரசாரம் செய்தார். பின் திருச்சியில் நடைபெற இருந்து பொதுக்கூட்டம் மழையால் ரத்துசெய்யப்பட்டு சென்னை திரும்பினார்.
நேற்றிரவு வடசென்னை தங்கசாலையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வடசென்னைமாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இன்று மாலை திமுக மற்றும் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து மைலாப்பூர் மாங்கொல்லையில் கருணாநிதி பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications