வாத்தியார் அடித்து 3ம் வகுப்பு மாணவி காயம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மதிய உணவை சாப்பிடாமல் இருந்த 3வது வகுப்பு படிக்கும்மாணவியை ஆசிரியர் அடித்ததால் மாணவியின் முகம் வீங்கியது.
பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்குமீஞ்சூரைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவரின் மகள் ஆஃப்ரின் (வயது 8) 3வது வகுப்பு படித்து வருகிறார்.சம்பவ நாளன்று மதிய உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார் ஆஃப்ரின். இதைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர்வினோத் குமார், ஆஃப்ரினை கண்டித்துள்ளார்.அத்தோடு நில்லாமல் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இதைக் கேட்டு கேட்டு அடித்துள்ளாராம். 2 நாட்களுக்கு முன்புஆஃப்ரினை அடித்தபோது கன்னம் வீங்கி விட்டது. அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் தண்ணீர்தெளிவித்து ஆஃப்ரினுக்கு மயக்கம் தெளிவித்தனாரம்.
வீட்டுக்கு வந்த ஆஃப்ரின் நடந்தது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். கொந்தளித்துப் போனஅப்பாஸ் அலி தனது மகளை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை கொடுத்துள்ளார். பின்னர் பள்ளி முதல்வரிடம்சென்று முறையிட்டுள்ளார்.
ஆசிரியர் வினோத் குமாரை அழைத்து விசாரிப்பதற்குப் பதில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதுசாதாரணமான விஷயம் என்று கூறியுள்ளார் முதல்வர். இதை எதிர்பார்க்காத அப்பாஸ் அலி, பொன்னேரிஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் வினோத் குமாரிடம் ஆர்.டி.ஓ. விசாரணைநடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications