மரக் கன்று கொடுத்து வாக்கு கேட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தென்னை மரக் கன்றை வாக்காளர்களுக்குக் கொடுத்து வாக்கு சேகரித்ததற்காக பெண் வேட்பாளரை போலீஸார்கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அதியமான்கோட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு சிவகாமி என்பவர்சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு குலை தள்ளிய தென்னை மரச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், நூதனமாக வீட்டுக்கு ஒரு தென்னை மரக் கன்றைக் கொடுத்துஓட்டு கேட்டார். இதுகுறித்து மற்ற வேட்பாளர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் சிவகாமியின் வீட்டுக்குச் சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு 450தென்னை மரக் கன்றுகள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சிவகாமி, அவரது கணவர் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications