மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமேஸ்வரம்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்க நேற்று இரவு கடலுக்குள்சென்றனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்குவந்தனர்.கண்கள் கூசச் செய்யும் அளவுக்கு பிரகாசமான விளக்குகளை ஒளிரச் செய்த அவர்கள், மீனவர்களை ஓடிவிடுமாறு எச்சரித்தனர். இதனால் தடுமாறிய மீனவர்கள் தங்களது வலைகளை படகுகளில் போட்டுக் கொண்டுஅங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனால் திடீரென வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும் சரமாரியாகசுட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்தகடற்படையினர், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மீன் பிடிவலைகளையும் அறுத்தெறிந்தனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications