மதுரை உயர்நீதிமன்றத்தில் நெல்லை வித்யா ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நெல்லையில் 2 டாக்டர்களால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாக கூறப்படும் இளம் பெண் வித்யாவை,நெல்லை போலீஸார் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்தினர்.

நெல்லையைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கு 13 வயதாக இருக்கும்போதிலிருந்து நெல்லையைச் சேர்ந்த டாக்டர்சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகனான டாக்டர் ஹரிசங்கர் ஆகியோர் பாலியல் சித்திரவதைக்குஆளாக்கியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக வித்யாவின் நண்பர் பிரடெரிக் ஸ்டான்லி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ்மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, வித்யாவை இன்று நேரில் ஆஜர்படுத்துமாறுநெல்லை போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மதுரை காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த வித்யாவை நெல்லை போலீஸார் இன்று பாதுகாப்புடன்நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ராஜசூர்யா ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வித்யாவிடம் சிலகேள்விகளைக் கேட்ட நீதிபதிகள், இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகதெரிவித்தனர்.

இதையடுத்து வித்யாவை மீண்டும் காப்பகத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+