சாப்பாடு தொண்டையில் சிக்கி மூதாட்டி சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
75 வயதான மூதாட்டிக்கு அவரது மகன் சாப்பாடு ஊட்டி விட்டபோது, தொண்டையில் சாப்பாடு சிக்கிக் அந்தமூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை, அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் மரியம்மாள். இவருக்கு 75 வயதாகிறது. சுயமாக எந்தசெயலையும் செய்ய முடியாத அளவுக்கு முடங்கிப் போயிருப்பவர்.மரியம்மாளுக்கு அவரது மகன் அந்தோணி சைமன்ஸ், சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார். அப்போது தொண்டைக்குழியில் சாப்பாடு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் மரியம்மாள் விக்க ஆரம்பித்தார். சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு மரியம்மாள்பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications