வன்முறையை தூண்டுகிறார் ஜெ.: திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமீது மாநில தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும் என்று திமுக கோரியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழக செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை நகரில் அமைதியாக தேர்தல் நடந்து வருகிறது. ஆனால்அதை சீர்குலைக்கும் வகையில், ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.147வது வார்டில் உள்ள வாக்குச் சாவடியில் அதிமுக தொண்டர்கள் புகுந்து வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு திமுகவினர் தான் காரணம் என பொய்யான தகவலை கூறியிருக்கிறார்ஜெயலலிதா.
சென்னை நகரில் இரண்டு இடங்களில்தான் வன்முறை நடந்துள்ளது. இரண்டிலுமே அதிமுக ரெளடிகள்தான்சம்பந்தப்பட்டுள்ளனர்.
வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் உடனடியாகவழக்கு தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications