உள்ளாட்சி: 1 மணி வரை 40% வாக்குகள் பதிவு
கோவை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கோவை, சேலம், நெல்லை மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.
தமிழகத்தில் நான்கு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 28,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குஇன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது.கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளுக்கும், சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தலா 60வார்டுகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.3 மாநகராட்சிகளிலும் வாக்குப் பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 12 மணிநிலவரப்படி நகர்ப்புறங்களில் 30 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களில் 28 சதவீத வாக்குப் பதிவும்பதிவாகியுள்ளது.மதுரை மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பலர் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வாக்களித்துவருகின்றனர். குமரியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குசெல்லாமல் வாக்களித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் முற்பகல் 12 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications