ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன்ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்பட தமிழகத்தின் 28,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதல் கட்டவாக்குப் பதிவு நடந்தது. இதில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறைநடந்தது. தமிழகத்தின் இதர பகுதிகளில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்தது.முதல் கட்ட வாக்குப பதிவில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்தபாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெட்டிகள் பாதுகாப்பானஅறையில் வைத்து பூட்டப்பட்டன.
மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வருகிற 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில்மொத்தம் 8 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications