முத்தூர்: தமிழர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு!
கொழும்பு:
இலங்கையின் முத்தூர் பகுதியில் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களின் உடல்களைதோண்டியெடுத்து ஆய்வு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
பாரீஸைச் சேர்ந்த ஆக்ஷன் கண்ட்ரோல் லா பேம் என்றதொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிவாரண உதவிப்பணியாளர்கள் முத்தூர் பகுதியில் உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்தது.இந்த சண்டைக்குப் பின்னர் பாரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 7 நிவாரணப் பணியாளர்கள் கொடூரமாககொல்லப்பட்ட நிலையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களில் 15 பேர் தமிழர்கள் ஆவர்.
இவர்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றதாக இலங்கை அரசு கூறியது. ஆனால் இதை மறுத்த புலிகள்,ராணுவம்தான் கொன்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுநடத்திய ஆய்வில், இலங்கை ராணுவம்தான் 17 பேரையும் ஈவு இரக்கமின்றி கொன்றது தெரிய வந்தது. ஆனால்இதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 17 பேரின் உடல்களையும் தோண்டியெடுத்து பரிசோதனை நடத்த இலங்கை அரசுமுன்வந்துள்ளது. வருகிற புதன்கிழமை உடல்கள் தோண்டியெடுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் கொழும்புகொண்டு வரப்பட்டு, சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
தொடர்பான செய்திகள்பும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதன் முடிவுகளை பிரான்ஸ்நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பிரேதப் பரிசோதனையின்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் உடன் இருப்பர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications