சீயக்காய் சாப்பிட்டு கைதி தற்கொலை முயற்சி!
புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்புநிலவுகிறது.
கடந்த வியாழக்கிழமை புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 ஆயுள் தண்டனைக் கைதிகள்சீயக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரோலில் செல்ல சிறை நிர்வாகம்அனுமதி தராததால் ஏமாற்றமடைந்ததால் இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.இந்த நிலையில், மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றதால் புதுவை சிறையில் பதட்டம் நிலவுகிறது. புதுவைமாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சார்லஸ் (30) என்ற கைதி, கொலை வழக்கில் கைதாகி இங்குஅடைக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட பரோலில் செல்ல அனுமதி கேட்டு அவர்விண்ணப்பித்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தை சிறை நிர்வாகம் நிராகரித்து விட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த சார்லஸ் சீயக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உடனடியாகஅவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சார்லஸ் உயிர்பிழைத்தார்.
அடுத்தடுத்து சீயக்காய் சாப்பிட்டு கைதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் புதுவையில் சலசலப்புஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications