நவ.10ல் இந்தியா-பாக். பேச்சு?
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 10ம் தேதிநடைபெறும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் டான் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 10ம்தேதி தொடங்கி 2 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பேச்சுவார்த்தையின்போது மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ஹவானாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் ஷாரப்பும் பேசிக் கொண்டபடி, தீவிரவாத தடுப்புஅமைப்பை செயல்முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த சந்திப்பின்போதுமுக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதர் சத்யபிரதா பால் மற்றும் இந்தியாவுக்கானபாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகித் மாலிக் ஆகியோரும் பங்கேற்பார்கள்.












Click it and Unblock the Notifications