விஜயகாந்த்துக்கு இந்து முன்னணி ஆதரவு!
சென்னை:
தமிழகத்தில் வன்முறை, அராஜகங்களுக்கு எதிராக விஜயகாந்த் மக்கள் சக்தியை திரட்டினால் அவருக்கு இந்துமுன்னணி ஆதரவு கொடுக்கும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது சென்னையில் பயங்கர வன்முறை, கலவரம் ஆகியவை ஏற்பட்டுள்ளது.ஆளுங்கட்சியின் துணையோடு இது நடந்தேறியுள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அமைதியாகஇருந்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.எனக்கு 80 வயதாகிறது. இதுவரை இப்படி ஒரு அராஜக வன்முறைக் காட்சிகளை நான் பார்த்ததில்லை.வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருக்கிற நிலையைப் பார்த்தால் அடுத்த தேர்தலில் வீச்சரிவாள், சைக்கிள் செயின் போன்றவை தேர்தல்சின்னங்கள் ஆகி விடும் போல தெரிகிறது.விஜயகாந்த் கூறியதைப் போல மக்கள் சக்தி ஒன்று திரண்டு இந்த அராஜகத்தை தடுக்க வேண்டும். இதுபோன்றஅராஜகத்திற்கு எதிராக மக்கள் சக்தியை விஜயகாந்த் திரட்டினால் அவருக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.
மக்கள் சக்தி இயக்கம் தொடங்கிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றோர் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள்இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராம. கோபாலன்.












Click it and Unblock the Notifications