ஊக்க மருந்து: சிக்கினார் சோயப் அக்தார்!
ஜெய்ப்பூர்
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை சாப்பிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சோயப் அக்தார் மற்றும்முகம்மது ஆசிப் ஆகிய இருவரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் உடனடியாக நாடு திரும்புமாறுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி இந்தியாவில் தொடங்கியுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி நாடுகளின் அணிகள் இதில் கலந்து கொண்டுள்ளன.அனைத்து வீரர்களுக்கும் ஊக்க மருந்து சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான்வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், வேகப் பந்து வீச்சாளர்கள் அக்தார் மற்றும் ஆசிப் ஆகியஇருவரும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவீரர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், வீரர்களிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை சிட்னி மற்றும்கோலாலம்பூருக்கு சோதனைக்காக அனுப்பினோம். அதில் அக்தார் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து இரு வீரர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications