தன் காரை தானே எரித்த பெண் வேட்பாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தனது காரை தானே எரித்து நாடகமாடியதாக திருச்சி மாநகராட்சித் தேர்தலில்போட்டியிட்ட அதிமுக பெண் வேட்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் 57வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் வனிதா.நேற்று 2வது கட்ட வாக்குப் பதிவின்போது உறையூரில் உள்ள வாக்குச் சாவடிக்குஅருகே நிறுத்தப்பட்டிருந்த வனிதாவின் கார் திடீரென தீப்பிடித்த எரிந்தது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர்தான் தனது காரை எரித்து விட்டதாகவனிதா கூறினார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், காரில்பாஸ்பரஸ் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனது காரில் தானே இந்த எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் பொருளை வைத்து விட்டுவனிதா நாடகமாடியதாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடந்து வனிதாவையும்,அவரது கார் டிரைவர் மணிகண்டனையும் போலீஸார் இன்று கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications