கள்ள ஓட்டு போட்டவர் கையில் நறுக்!
சென்னை:
சென்னை அருகே ஆலந்தூர் நகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட வந்த நபரின் கையில் பெண் வேட்பாளர்நறுக் என கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. வாக்குப் பதிவு முடிய முக்கால் மணிநேரம் இருக்கும் நிலையில், ஒரு கும்பல் உள்ளே புகுந்தது.அதில் ஒரு வாலிபர், தேர்தல் அதிகாரியிடமிருந்த ஓட்டுச் சீட்டுக்களைப் பறித்து கள்ள ஓட்டு போட முயன்றார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த சுயேச்சை வேட்பாளர் ரமணி ஆத்திரமடைந்தார். அந்த வாலிபரை நோக்கிஆவேசத்துடன் ஓடிய ரமணி, ஓட்டுச் சீட்டுக்களைப் பறிக்க முயன்றார். ஆனால் அந்த நபர், ரமணியை தாக்கினார்.இதனால் கோபமடைந்த ரமணி, அந்த வாலிபரின் கையில் வெடுக்கென ஒரு கடி கடித்தார்.
வலி தாங்க முடியாமல் அலறிய அந்த நபர் அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் மீண்டும் கள்ள ஓட்டுப் போடமுயன்றார். இருப்பினும் ரமணி அந்த நபரை கள்ள ஓட்டுப் போட விடாமல் சுமார் கால் மணி நேரம்போராடினார்.
அப்போது அங்கு போலீஸார் வந்ததும் அந்த கள்ள ஓட்டு நபர் தப்பி விட்டார். கள்ள ஓட்டுப் போட முயன்றநபரை பெண் வேட்பாளர் கடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications