மேயர் பதவி: திமுக-கூட்டணி கட்சிகள் ஆலோசனை
சென்னை:
மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்துதிமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஆலோசனை தொடங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கைதொடங்குகிறது. இந்த நிலையில், மேயர்,துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து கூட்டணிக்கட்சிகளுடன் திமுக ஆலோசனையை தொடங்கியுள்ளது.அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகசார்பில் ஆற்காடு வீராசாமி தலைமையிலான குழு கலந்து கொண்டது. முதலில்காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் காங்கிரஸ் குழு ஆலோசனையில்கலந்து கொண்டது. திருச்சி, கோவை மாநகராட்சி மேயர் பதவியை தங்களுக்குஒதுக்குமாறு காங்கிரஸ் கோரியுள்ளதாக தெரிகிறது.
அக்கட்சிக்கு ஏற்கனவே 2 மேயர் பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளதுநினைவிருக்கலாம். காங்கிரஸைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே.மணிதலைமையில் பாமக குழு ஆலோசனையில் கலந்து கொண்டது. முதல்வர்கருணாநிதியையும் இக்குழு சந்தித்துப் பேசியது. பாமகவுக்கு மாநகராட்சி எதுவும்ஒதுக்கப்படவில்லை.
இதனால் நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவியை பங்கிடுவதுதொடர்பாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவும்திமுகவுடன் ஆலோசனை நடத்தியது. இன்று விடுதலைச் சிறுத்தைகள், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஆகியோருடனும் திமுக பேசுகிறது.