வாக்கு எண்ணும் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னை அருகே குன்றத்தூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
மாங்காடி, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை குன்றத்தூரில் ஒரு தனியார்கல்லூரியில் நடந்தது.
இந் நிலையில் அங்கு குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பொறுப்பாளர் மனோகரனுக்குதொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து வாக்கு எண்ணிக்கை மையத்தை சோதனையிட்டனர். வாக்கு எண்ணும் பணியும்நிறுத்தப்பட்டது.
ஆனால், சோதனையில் குண்டு ஏதும் சிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் பின் தங்கிய யாரோ ஒருவேட்பாளரின் ஆட்கள் தான் இந்த புரளியைக் கிளப்பி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மிரட்டலால் வாக்கு எண்ணும் பணி சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்தது.












Click it and Unblock the Notifications