மதுரை வன்முறை வழக்கு சென்னைக்கு மாற்றம்
மதுரை:மதுரை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுதோல்வியுற்ற ராஜன் செல்லப்பா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி மதுரை கிளைநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரைமாநகராட்சியின் 65வது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜா சீனிவாசன் திமுகவினரால் கடத்தப்பட்டார். 55 மற்றும்58வது வார்டுகளில் போலீஸ் உதவி ஆணையர் சுந்தரேசன் உதவியுடன் அதிமுக பூத் ஏஜென்டுகள்வெளியேற்றப்பட்டனர். இங்கு அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன.
எனவே இந்த பூத்களிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மதுரைமாநகராட்சி ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மிஸ்ரா, ராஜ சூர்யா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர்நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பின்னர் தடை விதிக்கக் கூடாது எனஉச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே ஓட்டு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது.
2 வார்டுகளில் மறு தேர்தல் கோரப்பட்டுள்ளது. இதேபோல சென்னை மாநகராட்சியிலும் மறு தேர்தல்கோரப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நலுவையில் உள்ளது.
எனவே இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரைணக்கு மாற்றுகிறோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications