திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர் திடீர் மரணம்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பின்னர் திமுகவுக்குத் தாவிய பெண்வேட்பாளர் மேரி டேணியல் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனால் அவரது இல்லம் உள்ள பகுதியில்பரபரப்பு நிலவுகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் மேரி டேணியல். 50 வயதான இவர் ஆரம்பம் முதலே தீவிரஅதிமுக தொண்டர். 109வது வார்டு மகளிர் அணித் தலைவியாகவும் இருந்து வந்தார்.
அதிமுக சார்பில் 109வது வார்டுக்கு போட்டியிட்டார். வாக்குப் பதிவு நாளன்று மாலை திடீரென இவர்திமுகவுக்குத் தாவினார். இவரைப் போல மேலும் ஒரு அதிமுக பெண் வேட்பாளரும் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், திமுகவில் சேர்ந்த நாள் முதல் யாருனுடம் பேசாமல், அமைதியாக இருந்து வந்தார் மேரி. நேற்றுஅவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மேரி இறந்தார். அவரது உடல் சுதந்திரா நகரில் உள்ள அவரது வீட்டுக்குஎடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்து மேரி உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
அதிமுகவிலிருந்து தாவிய சில நாட்களிலேயே திடீரென மேரி இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.மேலும் இரு கட்சித் தொண்டர்களும் அங்கு கூடியுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications