ஒரு ஓட்டு கூட வாங்காத அதிமுக வேட்பாளர்!!
செஞ்சி:செஞ்சி அனந்தபுரம் பேரூராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவேட்பாளரக்கு ஒரு ஒட்டு கூட கிடைக்கவில்லை.
இந்த பேரூராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜோதிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. அவர்போட்ட ஓட்டு கூட செல்லாத ஓட்டாகி விட்டது.
நோ ஓட் தேமுதிக:
அதே போல வேலூர் தொரப்பாடி பேரூராட்சி 1வது வார்ட்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வினோத்குமார், அல்லாபுரம் பேரூராட்சி 9வதுவார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பூபாலன், பென்னாத்தூர் பேரூராட்சி 5வது வார்ட்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பானுமதி ஆகிய 3வேட்பாளர்களும் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.
இதுபோல் செங்கோட்டை நகராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்குப்போட்டியிட்ட அண்ணாமலை சுயேச்சையாகப் போட்டியிட்ட இவருக்கு ஊஞ்சல்சின்னம் ஒதுக்கப்பட்டது. கொஞ்மாச்சும் ஓட்டு கிடைக்கும் என அவர் நினைத்தார்.ஆனால் ஒரு ஓட்டு கூட இவருக்குக் கிடைக்கவில்லை. இவரே ஓட்டுப்போடவில்லையாம்.
ஒன் ஓட் வேட்பாளர்கள்:
அதேபோல் அல்லாபுரம் பேரூராட்சி 5வது வார்ட்டில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் சுரேஷ் ஒரேயொரு ஓட்டு பெற்றிருந்தார்.
தென்காசி நகராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேமுதிக சார்பில்போட்டியிட்ட முருகேஷ். அவருக்கு அவர் அளித்த ஓரே ஒரு ஓட்டு மட்டுமேபதிவானது.
தப்பி பிழைத்த திமுக:
செங்கோட்டை நகராட்சியின் 11 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தரவீந்திரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பரமசிவனை ஒருஓட்டு வித்தியாசத்தில் தப்பித்தோம், பிழைத்தோம் என வெற்றி பெற்றார்.
குலுக்கலில் வென்ற திமுக:
இந்த நகராட்சியின் 24வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவின் பீர் முகம்மது,சுயேச்சையான மணிகண்டன் ஆகிய இருவரும் சம வாக்குகளைப் பெற்றனர்.இதையடுத்து குலுக்கல் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் பீர் முகம்மதுவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தாமரைக்கனி மகன் வெற்றி:
ஸ்ரீவில்லிப்புத்தூர் நகாரட்சி போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ.தாமரைக்கனியின்மகன் தங்கமாங்கனி நகராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தோல்வியால் வேட்பாளர் தற்கொலை:
வேலூர் ஆலங்காயம் ஓன்றியம் இளையநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குபோட்டியிட்டார் கண்ணன் என்ற லட்சுமண சிங். இவரை எதிர்த்து போட்டியிட்டார்இவரது தம்பி பீம்சிங்.
இதில் பீம்சிங் 225வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். லட்சுமண சிங் 115 வாக்குகள்பெற்று தேல்வியுற்றார். இதனால் மனமுடைந்த லட்சுமண சிங் பூச்சி மருந்து குடித்தார்.அவரை வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்தார்.