பணம், வன்முறைக்கு கிடைத்த வெற்றி-விஜயகாந்த்
புதுச்சேரி:பண பலம், வன்முறை ஆகியவற்றால் தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதுஎன்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் தற்போது புதுவையில் முகாமிட்டு சபரி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகேட்டபோது,
அரசியலில் எங்களது கட்சி நன்கு வளர்ச்சி அடைந்து வருவதை தேர்தல் முடிவுகள்உணர்த்துகின்றன. தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி ஏழைகளுக்கு கிடைத்த எள்உருண்டை.
முக்கிய எதிர்க்கட்சிக்கு இணையான வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது. இதுசந்தோஷம் தருகிறது. திமுகவின் வெற்றி உண்மையான வெற்றி கிடையாது. பணபலம், வன்முறை ஆகியவற்றால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது.
புதுவையிலும் கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 7 நிர்வாகிகள்தான் உள்ளனர். விரைவில் மேலும் அதிக அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications