நெல்லை-தேமுதிகவுக்கு 2ம் இடம்-மதிமுக 0
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில் திமுக தனித்தே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த மாநகராட்சியை அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியுள்ளது.
திமுக 29 இடங்களில் வென்றுள்ளதால் இங்கு தனித்தே அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
9 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வியுள்ளது.மதிமுகவுக்கு பலம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் நெல்லையிலேயே அந்தக் கட்சி படுதோல்விஅடைந்திருப்பது வைகோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லையில் பெரும்பாலான இடங்களில் விஜயகாந்தின் தேமுதிக இரண்டாவது இடத்தைப் பிடித்துக்காட்டியுள்ளது. இதன்மூலம் அதிமுக, மதிமுகவின் ஓட்டு வங்கியை விஜய்காந்த் கரைத்துவிட்டது தெளிவாகிறது.
வெற்றி விவரம்:
மொத்த வார்டுகள்: 55
முடிவு தெரிந்தவை: 55
திமுக - 29
காங்கிரஸ் - 3
சிபிஎம் - 2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
அதிமுக - 13
பாஜக - 1
சுயேச்சைகள் - 7
இதன் மூலம் இந்த மாநகராட்சியை திமுகவிடம் இழந்துள்ளது அதிமுக. இந்த மாநகராட்சியில் மேயர், துணை மேயர் ஆகியஇரண்டு பதவிகளையும் திமுகவே கைப்பற்ற உள்ளது.












Click it and Unblock the Notifications