சென்னை மாநகராட்சி-அதிமுக மனு தள்ளுபடி
டெல்லி:சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிஅதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரியும்உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். மீதமுள்ள வார்டுகளில் பதிவான வாக்குகளை நாளையே எண்ணலாம் என இடைக்காலஉத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கறிஞரும், எம்.பியுமான ஜோதிதலைமையில் வழக்கறிஞர்கள் குழு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த்த தவறும்இல்லை. சரியான உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டபடி மறு வாக்குப் பதிவையும், வாக்கு எண்ணிக்கையையும் மேற்கொள்ளலாம். இருப்பினும்12 வார்டுகளில் காலை 7 மணிக்கு மறு வாக்குப் பதிவு தொடங்குவதால், மீதமுள்ள வார்டுகளில் பதிவானவாக்குகளை காலை 8 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மேல் எண்ண வேண்டும் என்று நீதிபதிகள்தங்களது தீர்ப்பில் தெரிவித்து, அதிமுகவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதற்கிடையே, நாளை நடைபெறும் மறு வாக்குப் பதிவு மற்றும் வாக்குஎண்ணிக்கையையும் புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.