சென்னை: கடலில் மூழ்கி 4 இளைஞர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மெரீனா கடற்கரையில், குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

மைலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 17). இவரது நண்பர்ஏழுமலை. நேற்று இருவரும் மெரீனா கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர்.

அப்போது அதே கணேசபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, ராஜேஷ் ஆகிய (இருவரும்அண்ணன், தம்பிகள்) இருவரும் வந்தனர். இவர்கள் வினோத், ஏழுமலையின்நண்பர்கள் என்பதால் நான்கு பேரும் சேர்ந்து குளித்துள்ளனர்.

கலங்கரை விளக்கம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, யார் அதிக தூரம்சென்று குளிப்பது என போட்டி கிளம்பியது. நான்கு பேரும் மாறி மாறி அதிகதூரத்திற்கு சென்றும், ஆழமான பகுதிக்குச் சென்றும் குளித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் கடல் சுழல் அலையில் சிக்கிக்கொண்டனர். கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பரிதாபமாகஇறந்தனர்.

நான்கு பேரையும் காணாத அவர்களது பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.நால்வரும் கடலில் குளிக்கச் சென்றதை அறிந்த போலீசார் கடற்கரையில் நான்குபேரையும் தேடினர்.

இதில் ராஜேஷின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது.ஏழுமலை, வினோத் ஆகியோரின் உடல்கள் டுமீங் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கின.மூர்த்தியின் உடல் மட்டும் சிக்கவில்லை.

ஒரே பகுதியில் நான்கு இளைஞர்கள் காணாமல் போனதால் கணேசபுரமே சோகத்தில்மூழ்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+