இன்று மாலை மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:மத்திய அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. வெளியுறவு அமைச்சராக பிரணாப்முகர்ஜி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட சில இலாகாக்களுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலை உள்ளது.
நீண்ட நாட்களாக இந்தப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் அவற்றுக்கு அமைச்சர்களை நியமிக்க பிரதமர்மன்மோகன் சிங் முடிவு செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் நேற்றுமாலை தீவீர ஆலோசனை நடத்தினர்.
இதன் இறுதியில் யாருக்கு எந்த அமைச்சர் பொறுப்பு என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது. இதையடுத்துஇன்று மாலை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில், இரவு 7.30மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.பாதுகாப்புத் துறைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா அல்லது திக் விஜய் சிங் ஆகியோரில் ஒருவர் பதவியேற்கக் கூடும்.ஏ.கே.அந்தோணிக்கு தொழிலாளர் நலத்துறை வழங்கப்படலாம்.
கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், நடிகருமான அம்பரீஷுக்கும் இணை அமைச்சர் பதவிவழங்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications