For Daily Alerts
Just In
சென்னை போலீஸுக்கு 100 நவீன கார்கள்
சென்னை:சென்னை காவல்துறைக்கு புதிதாக 100 நவீன கார்களை ஹூண்டாய் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.
சென்னை காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய ரோந்து கார்கள்வழங்கப்படும் என காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது 100 கார்கள் சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தக்கார்களை இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்ஸ்டேடியத்தில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார்களுக்கான சாவிகளை மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரணிடம் வழங்கினார். இவற்றில் 75 கார்கள் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கும், 25 கார்கள்போக்குவரத்து பிரிவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, October 24, 2006, 5:30 [IST]