தொடரும் மழை; ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு
ராமேஸ்வரம்:தமிழகம் முழுவதும் தொடர்ந்து இன்றும் கன மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் நேற்று இரவு முழுவதும்விடிய விடிய மழை பெய்தது, கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 19ம் தேதி தொடங்கிய பருவ மழை,கடந்த ஓரிரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
ராமேஸ்வரத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தின் பலபகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலஓடியது.
இந்த நிலையில் இரவில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டது. இதனால் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டும்கரைக்குத் திரும்பினர். இன்றும் மழை தொடர்ந்து பெய்தவண்ணம் உள்ளது.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில்நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரைதமிழகத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.