விமானத்தை விட்டு இறங்க மறுத்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:சென்னையிலிருந்து கோவை சென்ற தனியார் விமானம் படு தாமதமாக கிளம்பியதால், அதில் பயணித்தபயணிகள், விமானத்திலிருந்து இறங்காமல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் தனியார் விமானம், தினசரி காலை 6.10க்கு புறப்பட்டு 7.20மணிக்கு கோவையை அடையும். நேற்று காலையும் அந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில்கோவை செல்வதற்காக 42 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

ஆனால் விமானம் கிளம்புவதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாமதமாக காலை 10.25மணிக்குத்தான் விமானம் கோவையை சென்றடைந்தது.இதனால் கடுப்பான பயணிகள், கோவையில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தை விட்டு இறங்காமல்போராட்டத்தில் இறங்கினர். 12 பேர் மட்டும் இறங்கிச் சென்று விட்டனர். ஆனால் மற்ற 30 பேரும் இறங்கமறுத்து போராட்டத்தில் குதித்ததாதல் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். ஆனால் சம்பந்தப்பட்டவிமான நிறுவன அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினால் தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனபயணிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடம், இனிமேல் இதுபோலகால தாமதம் ஆகாது என்று சமாதானப்படுத்தினர். மேலும் அனைத்துப் பயணிகளுக்கும் ஒரு இலவசடிக்கெட்டையும் வழங்கினர். இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னைக்கு பயணிகள்இலவசமாக செல்ல முடியும்.

இதனால் சமாதானமடைந்த பயணிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+