கர்நாடக முதல்வர் மகனுக்கு அடி, உதை!
பெங்களூர்:பெங்களூரில் உள்ள ஹோட்டலில் தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டகர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடாவை, ஹோட்டல்நிர்வாகிகளும், ஊழியர்களும் சேர்ந்து சரமாரியாக அடித்து, உதைத்ததால் அவர்காயமடைந்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடா. இவர் நேற்று நள்ளிரவுபெங்களூரில் உள்ள எம்பயர் என்ற ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன்சென்றுள்ளார். தங்களுக்கு சாப்பாடு வேண்டும் என்று நிகில் கெளடா கூறியுள்ளார்.
ஆனால் நேரம் கடந்து விட்டதால் சாப்பாடு காலியாகி விட்டது என ஹோட்டல்ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நிகில் கெளடாவும், அவரதுநண்பர்களும், ஹோட்டலில் இருந்த மேசை, நாற்காலிகளை தூக்கிப் போட்டுஉடைத்தனர். ஹோட்டல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர்.
இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஹோட்டல் நிர்வாகிகளும், ஊழயிர்களும் சுற்றிவளைத்து நிகில் கெளடா மற்றும் நண்பர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். அடி,உதை தாங்க முடியாமல் நிகில் கெளடாவும், அவரது நண்பர்களும் அலறியுள்ளனர்.
இருந்தும் விடாமல் தாறுமாறாக அடித்ததில் அனைவரும் காயமடைந்தனர்.இதையடுத்து நிகில் கெளடாவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பித்துவெளியேறினர். பின்னர் நிகில் கெளடா தனியார் மருத்துவமனை ஒன்றில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் மகன் நள்ளிரவில் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டு அடி, உதைவாங்கியது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications