For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் ஆட்சியை குறை சொன்னேனா-விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:அதிமுக தலைவர்கள் விடும் அறிக்கைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.தேமுதிகவுக்கு இனி ஏறுமுகம்தான் என்று அக் கட்சியின் தலைவரும், நடிகமானவிஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா காட்டமாக அறிக்கை விட அதற்கு விஜயகாந்த்தும்படு காட்டமாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தை விமர்சித்துமுன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர்அறிக்கை விட்டனர்.

இதற்கு விஜயகாந்த் பதில் தராமல் இருந்து வருகிறார். இந் நிலையில் மதுரைமாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக கவுன்சிலர்களின்ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த்பேசினார்.

அப்போது, நான் எம்.ஜி.ஆர். ஆட்சியை குறை கூறியதாக கூறுகிறார்கள். நான்ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆட்சியை குறை கூறியது இல்லை. இதுதொடர்பாக அதிமுகதலைவர்கள் விடும் அறிக்கைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

கருணாநிதியின் முந்தைய ஆட்சிகளையும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகஆட்சியையும்தான் நான் குறை கூறிப் பேசியுள்ளேன். ஒருபோதும் எம்.ஜி.ஆர்.ஆட்சியை நான் விமர்சனம் செய்ததில்லை.

இனி தேமுதிகவுக்கு ஏறுமுகம்தான். மக்கள் நம்பிக்கையை பெற்று நமது கட்சி வளரஆரம்பித்து விட்டது. நமது கழகம் வளர்ந்து வரும் கட்சி.

மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேமுதிக கவுன்சிலர்கள் தங்களதுதனித்துவத்தை இழந்து விடக் கூடாது. தங்கள் பகுதிகளின் அடிப்படைத் தேவைகளைநிறைவேற்றுவதிலும், நகரின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி செயல்பட வேண்டும்என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X