நின்ற லாரி மீது வந்த பஸ் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 4பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருச்செந்தூரிலிருந்து நேற்று இரவு மதுரைக்கு அரசுப் பேருந்து புறப்பட்டு வந்தது. நள்ளிரவில் அந்தப் பேருந்துஅருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்தலாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த மதுரையைச் சர்ந்த வீரம்மாள் (35), பொன்னுச்சாமி (55), பேருந்து நடத்துனர்திலகர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இருளாயி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications