பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் முதல் கைது
திருநெல்வேலி:சமீபத்தில் கொண்டு வரப்பட்ட குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையைச் சேர்ந்த ஒரு நபர்கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களைக் காப்பதற்காகசமீபத்தில் குடும்பப் பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தின் மூலம் கணவர்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களைக் காக்கபல்வேறு உத்தரவாத நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பெனடிக்ட்மேரி என்ற பெண் தனது கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறிமேலப்பாளையம் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், மேரியின் கணவர் ஜோசப்பை குடும்பப்பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications