ஜெ. பேரவை பொறுப்பு: நயினாரிடமிருந்து பறிப்பு!
சென்னை:முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனிடமிருந்த ஜெ. பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் செ.மா.வேலுச்சாமிஆகியோரது வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பப் போலீஸார் அதிரடி சோதனைநடத்தினர்.
இந்த சோதனையில் செ.மா.வேலுச்சாமி வீட்டிலிருந்து ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்நோட்டுக் கட்டுக்கள் சூட்கேஸ்கள் நிறைய பறிமுதல் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இதேபால நாகேந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்தசோதனையின்போதும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில், ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பிலிருந்து நயினார் நாகேந்திரன் நீக்கப்படுகிறார். அவர் கழக தேர்தல் பிரிவுஇணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் டி.வி.மகாதேவன் நியமிக்கப்படுகிறார்என்று கூறியுள்ளார்.
போலீஸ் ரெய்டு நடந்துள்ள நிலையில் நாகேந்திரனின் கட்சிப் பொறுப்புமாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications