சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று மாலை கொட்டும்மழையில் சூரசம்ஹார திருவிழா விமரிசையாக நடந்தேறியது. இதேபோல முருகனின்அறுபடை வீடுகளிலும் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் அனைத்திலும் கந்தசஷ்டி விழாவின் முக்கியநிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தேறியது. குறிப்பாகஅறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் வழக்கமான முறையில்விமரிசையாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தபோது பலத்த மழை கொட்டிய போதிலும், கடற்கரையில்திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் அதைப் பொருட்படுத்தாமல் குடைகளைப்பிடித்துக் கொண்டு சூரசம்ஹாரத்தை கண்டு முருகனை வணங்கினர்.

காலை முதல் பலத்த மழை பெய்து வந்தபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள்பலவற்றிலிருந்து கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சூரசம்ஹாரத்தைக்காண திரண்டிருந்தனர்.

மாலை 5.05 மணிக்கு யானைமுக சூரன் வதம் நடந்தது. இதையடுத்து 5.35 மணிக்குசிங்கமுக சூரன் வதமும், அதைத் தொடர்ந்து 5.45 மணிக்கு சூரபத்மன் வதமும்நடந்தது.

சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் நீராடிய பக்தர்கள் தங்களது சஷ்டி விரதத்தைமுடித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று முருகப் பெருமானை வணங்கினர்.

இதேபால திருப்பரங்குன்றம், பழனி, சென்னை வடபழனி முருகன் கோவில் உள்படஅனைத்து முருகன் தலங்களிலும் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+