டெங்குவுக்கு மாநில அரசுகளும் பொறுப்பு: அன்புமணி
டெல்லி:டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் மட்டும் இல்லை. மாநில அரசுகளும்இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்குகாய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுடையது. சுகாதாரம் என்பதுமாநில அரசுகளின் விவகாரம். இதில் மத்திய அரசின் பொறுப்பை விட மாநில அரசுகளின் பொறுப்புதான்அதிகம். மாநில அரசுகள்தான் திட்டத்தை தயாரித்து நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபால், நாட்டின் சிறந்த மருத்துவர்களில் ஒருவர்.அதில் சந்தேகமே இல்லை. அவரை அனைவரும் மதிக்கிறோம். ஆனால் அவர் நல்ல நிர்வாகி அல்ல, சொல்லப்போனால் நாட்டிலேயே மோசமான நிர்வாகி அவர்தான்.
அவரைப் போல நானும் ஒரு டாக்டர். எனவே அவருக்கும், எனக்கும் இடையே எந்த ஈகோ பிரச்சினையும்இருக்க முடியாது. நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியாத ஒருவரை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications