கிரையோஜெனிக் சோதனை: இந்தியா சாதனை
பெங்களூர்:இந்தியாவின் முதலாவது கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் அவசியம். அந்த வகைராக்கெட்டுகளை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளைத்தான் பயன்படுத்த முடியும்.
திரவ எரிபொருள் கொண்ட கிரையோஜெனிக் இயந்திரங்கள் இந்தியாவிடம் இல்லை. இதனால்ரஷியாவிடமிருந்து கிரையோஜெனிக் இயந்திரங்களை பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையைமாற்றி உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன், நமது நாட்டிலேயே கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கமுடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் மையத்தில் இதுதொடர்பான ஆய்வுகள்மற்றும் சோதனை நடந்து வருகின்றன.
தற்போது இந்த சோதனையில் முக்கிய கட்டம் எட்டப்பட்டுள்ளது. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன்இங்கே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் வெற்றிகரமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
மகேந்திரகிரி மையத்தில் நேற்று சுமார் 50 விநாடிகள் கிரையோஜெனிக் இயந்திரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டது.இச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பெங்களூரில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மகேந்திரகிரி மையத்தில் கிரையோஜெனிக் இயந்திரத்தின் முதலாவது சோதனைவெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாலை 6.20 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்எதிர்பார்த்த முடிவு கிடைத்தது.
ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் மேம்பாடுத் திட்டத்தில் இது மிகப் பெரிய மைல் கல் ஆகும். வளர்ச்சிஅடைந்த நாடுகளிடம் மட்டுமே இப்போது இந்த வசதி உள்ளது. தற்போது அந்த வசதியை இந்தியாவும்பெற்றுள்ளது.
அடுத்த நான்கு வாரங்களில் மீண்டும் ஒரு நீண்ட நேர சோதனை நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர்இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திரம் முழு பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
கிரையோஜெனிக் இயந்திரம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்திய ஏவுகனை திட்டங்களுக்குபெரும் ஊக்கம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications