ஜெ. புகார்: நரேஷ் குப்தா தள்ளுபடி
சென்னை:மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு ஆதாரம்இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டதாகசமீபத்தில் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.
அதாவது, 2 ஓட்டுக்கள் அதிமுகவுக்கு பதிவானால் 8 ஓட்டுக்கள் திமுகவுக்கு பதிவாகும் வகையில்இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருந்தாக ஜெயலலிதா கூறியுருந்தார்.
இந்தப் புகாருக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இதுகுறித்து நரேஷ் குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
கடந்த பொதுத் தேர்தலின்போதும் இதுபோல புகார்கள் வந்தன. இதுகுறித்து அனைத்துக் கட்சியினருக்கும்தெளிவாக விளக்கினோம். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். திருப்தியும் தெரிவித்தனர்.
இதுபோன்ற புகார்கள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டுமே ஆணையம் விளக்கம் அளிக்கவோ, விசாரணைநடத்தவோ முடியும்.
தற்போது வந்துள்ள புகார்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில்மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார் நரேஷ்குப்தா.












Click it and Unblock the Notifications