வேலூர்: திமுகவுக்கு எதிராக பாமக போராட்டம்
வேலூர்:உள்ளாட்சித் தேர்தலில் பாமகவை தோற்கடிக்க பாடுபட்ட வேலூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும்,ராணிப்பேட்டை எம்.எல்.ஏவுமான ஆர்.காந்தியைக் கண்டித்து பாமகவினர் வாயில் கருப்புத் துணி கட்டியபடிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பாமகவைதோற்கடித்து விட்டார் என காந்தி மீது டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட பாமக சார்பில் காந்தியைக் கண்டித்து வேலூரில் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆற்காடு பாமக எம்.எல்.ஏ. இளவழகன் தலைமை தாங்கினார்.திருப்பத்தூர் எம்.எல்.ஏ.ராஜா முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம்உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
அண்ணா கலையரங்கம் அருகே உண்ணாவிரதம் இருக்க மட்டுமே போலீஸார் பாமகவினருக்கு அனுமதிகொடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக கிளம்பியதால் போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதுதொடர்பாக பாமகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications