ஜெ. மீது டிஜிபியிடம் புகார்: எஸ்வி.சண்முகம்
சென்னை:என்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது. இதுதொடர்பாக காவல்துறை டிஜிபியிடம் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மீது புகார் கூறவுள்ளேன் என்று மதுரை மேற்குத் தொகுதி அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.எஸ்வி.சண்முகம் கூறியுள்ளார்.
அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசி, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியவர் எஸ்வி.சண்முகம். இப்போது கட்சிக்குள்ளேயே ஓரம் கட்டப்பட்டு விட்ட அவர் இன்னும்கட்சியை விட்டு நீக்கப்படவில்லை.
அவரை எம்எல்ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு அதிமுக தரப்பில் 2 முறை சபாநாயகர்ஆவுடையப்பனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அக்கோரிக்கையை ஆவுடையப்பன் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் சென்னைக்கு எஸ்வி.சண்முகம் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், எனது தொகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் நலத் திட்டத்தை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அத்திட்டம் நீண்ட நெடுங்காலமாக கோரப்பட்டு வந்த ஒன்று. எனவே தான் அந்த திட்டத்தை நிறைவேற்றிவைத்ததற்காக ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினேன். அதில் எந்தத் தவறும் இல்லை.
பிரிந்து கிடக்கும் திராவிட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும், தகுதியும் ஸ்டாலினுக்கு மட்டுமேஉண்டு என்றும் பேசினேன். இதிலும் ஒரு தவறும் இல்லை.
இதற்காக என் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. நான் கவலைப்படவில்லை. ஆனால் மதுரை மத்தியதொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துவிட்டனர்.
என்னைக் கொலை செய்ய சதி செய்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இதுதொடர்பாகடிஜிபியிடம் புகார் கொடுக்கவுள்ளேன்.
நான் அதிமுக கரை வேட்டி கட்டி வந்தால் உருவி விடுவோம் என அதிமுகவினர் மிரட்டுகின்றனர். எனவே நான்இப்போத அதிமுக கரை வேட்டி போட்ட வேட்டியை கட்டுவதே கிடையாது.
சட்டசபையில் நான் தனித்து செயல்படுவேன். இதற்காக எனக்கு பாதுகாப்பான, தனியான இடம் வழங்குமாறுசபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவே சென்னை வந்துள்ளேன். ஒருவேளை எனக்கு தனி இடம்கொடுக்கப்படாவிட்டால் இப்போது உள்ள இடத்திலேயே அமருவேன். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார் சண்முகம்.