திமுக எம்எல்ஏ பாபு கைது
சென்னை:மார்க்சிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலரை தாக்கிய வழக்கில் புரசைவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ விஎஸ்.பாபுகைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்த போது பெரம்பூரில் திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சிகளுக்குஇடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்டு முன்னாள் கவுன்சிலர் தேவி மற்றும் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந் நிலையில் தேவி போலீசில் புரசைவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ விஎஸ்.பாபு தன்னை தாக்கியதாக புகார்கொடுத்தார். மேலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வரதராஜனும், விஎஸ்.பாபுவைகைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து செம்பியத்தில் உள்ள விஎஸ்.பாபுவின் இல்லத்தில் அவரை போலீசார் கைது செய்து,செக்ரட்ரியேட் காலனி காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விஎஸ் பாபுவிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து திமுகவினர் அங்கு கூடினார்கள் இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் கலாட்டா, காலை வாரி விட்டது ஆகிய பிரச்சனைகளால் கூட்டணிக் கட்சியான பாமக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுக்கு எதிராக போர்க் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் இந்தகட்சிகளை சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தான் தனது கட்சி எம்எல்ஏவையே கைது செய்ய திமுக தலைமை உத்தரவிட்டதாகத் தெரிகிறது.