தமிழர் பகுதிகளில் இலங்கை விமான தாக்குதல்
கொழும்பு:இலங்கை விமானப்படையினர் 3வது நாளாக விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் பகுதிகளில் இன்றும்தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னர் இலங்கை பாதுகாப்புப் படையினர் தாக்குதலைதீவிரப்படுத்தியுள்ளனர். வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கோட்டையாக கருதப்படும் கிளிநொச்சியில் நேற்று அவர்கள் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் இன்றும் விமானப் படைத் தாக்குதல் தொடர்ந்தது. இன்று காலை மட்டக்களப்பில் உள்ளவிடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மற்றும் அருகாமையில் உள்ள இன்னொரு முகாமில் தாக்குதல் நடந்தது.இதேபோல மன்னார் பகுதியில் உள்ள புலிகளின் கடற்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று கிளிநொச்சியில் நடந்த தாக்குதலில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தநோயாளிகளில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்டநோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதேபோல பள்ளிக் கூட்ம் ஒன்றும் சேதமடைந்தது.
இதில் சண்முக ரத்தினம், கிரிசார்த் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர். இதேபோல் பூநகரி, வாகரை ஆகியபகுதிகளிலும் விமானப்படை தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications